ஹமாஸ் முக்கியத் தளபதி "காலி": புறக்காவல் நிலையத்தையும் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்!
Jun 3, 2025, 09:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் முக்கியத் தளபதி “காலி”: புறக்காவல் நிலையத்தையும் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா நகரில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், முக்கியத் தீவிரவாதத் தலைவர் ஒருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் காஸா நகரைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

பலியானவர்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முக்கியப் படைகளின் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் அடக்கம். அதேபோல, இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் உட்பட 2,500 நிலைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 450 இலக்குகளை அழித்திருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தையும் இஸ்ரேல் தரைப்படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த புறக்காவல் நிலையத்தில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கண்காணிப்பு நிலையங்கள், தீவிரவாத செயல்பாட்டாளர்களுக்கான பயிற்சி வளாகங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்த அதிரடி நடவடிக்கையின்போது, ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஜமாஸ் மூசா உட்பட ஹமாஸ் தீவிரவாதிகளின் பல தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட ஜமால் மூசா, தீவிரவாத அமைப்பில் சிறப்புப் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தவர். அதோடு, 1993-ம் ஆண்டு காஸா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IsraelHamasHamas commandar killedWAR
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்! – அண்ணாமலை

Next Post

சத்தீஸ்கர் முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்!

Related News

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies