ஆந்திராவில் பேருந்து மோதியதில் குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து விஜயவாடாவில் உள்ள பண்டிட் நேரு பேருந்து நிலையத்திற்கு நிறுத்துவதற்காக வந்து சேர்ந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பிளாட்பார்ம் எண் 12 இல் உள்ள நடைமேடையின் மீது ஏறியது.
அப்போது அங்கு பேருந்துக்காக காத்திக்கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 18 மாத குழந்தை மருத்துவமனையில் பலியானது.
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.