உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! - குடியரசுத்தலைவர்
Jul 5, 2025, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

Web Desk by Web Desk
Nov 7, 2023, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.

உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு    உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நாட்டில் விவசாயக் கல்வி மற்றும் விவசாயத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது என்றார் .

தொடக்கத்தில் இருந்து, இது விவசாயக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த மையமாக மாறியுள்ளது. 11,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

நோபல் பரிசு பெற்ற டாக்டர் நார்மன் போர்லாக், பந்த்நகர் பல்கலைக்கழகத்தை ‘பசுமைப் புரட்சியின் முன்னோடி’ என்று குறிப்பிட்டார் என்று கூறினார்.

நார்மன் போர்லாக் உருவாக்கிய மெக்சிகன் கோதுமை வகைகள் இந்த பல்கலைக்கழகத்தில் பரிசோதிக்கப்பட்டன. பசுமைப் புரட்சியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ‘பந்த்நகர் விதைகள்’ பற்றித் தெரியும்.

பந்த்நகர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட விதைகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் பயிர் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியில் பந்த்நகர் பல்கலைக்கழகம் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்திக்கு விவசாயத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என குறிப்பிட்டார். இப்பல்கலைக்கழகம் பல்வேறு தட்பவெப்பநிலையை தாங்கும் தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப்புற சமூகத்திற்கு உதவுவதாக தெரிவித்தார்.

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும் என தெரிவித்தார். வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகில் போட்டியிடக்கூடிய தொழில்துறைக்கு தயாராக உள்ள பட்டதாரிகளை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

காலநிலை மாற்றம் மற்றும் மண் சீரழிவு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க இன்று உலகம்  இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாக குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பழக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது.

நமது உணவுப் பழக்கத்தில் சிறுதானியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று கூறினார்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார். பயிர் மேலாண்மை, நானோ தொழில்நுட்பம், இயற்கை விவசாயம் போன்றவற்றின் மூலம் விவசாயத்தில் டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்தியதற்காக பந்த்நகர் பல்கலைக்கழகத்தை பாராட்டினார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். சில நிமிடங்களில் பல ஹெக்டேர் நிலத்தில் தெளிக்கக்கூடிய விவசாய ட்ரோனை பல்கலைக்கழகத்துக்கு என சொந்தமாக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ட்ரோன் தொழில்நுட்பத்தின் நன்மைகள் விரைவில் விவசாயிகளை சென்றடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

வேத காலத்தில் தீபாவளி பண்டிகை

Next Post

நேபாளத்திற்கு இரண்டாவது கட்ட நிவாரண பொருட்கள்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies