பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் தயாரிப்புகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உள்ளூர் தயாரிப்புகளை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்த பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினை கலைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த ‘செல்பி’யை ‘நமோ ஆப்’பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் தயாரிப்புகளுக்கு அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
அதன் ஒரு பகுதியாக பிலாஸ்பூரை சேர்ந்த எனது நண்பர் ரவியிடம் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கலை நய பொருள்களை வாங்கியதாக தெரிவித்தார்.