நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!
Jul 3, 2025, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை நாடு முழுவதும் வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளைத் தடை விதிக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாசுபடுத்தும் பட்டாசுகள் தொடர்பாக இந்த நீதிமன்றம் ஏற்கனவே, பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தனர். காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும், தவிர்க்கவும் நடவடிக்கைகள் தொடர்பாக கூறினர். இந்த உத்தரவு இராஜஸ்தான் உட்பட நாட்டின் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு தனது உத்தரவில் கூறினர்.

இராஜஸ்தான் மாநிலம் இதைக் கவனத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல, அதன்பிறகும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாட்டில் எந்த வகையான பட்டாசுகளுக்கு அனுமதி உள்ளது. பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.

உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பசுமைப் பட்டாசுகள் தவிர, அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது. பட்டாசுகளில் பேரியம் உப்புகளைப் பயன்படுத்துவதற்கும், நீண்ட வரிசையில் இணைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. நீண்ட வரிசையில் உள்ள பட்டாசுகள் மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளைத் தயாரிப்பதற்கு அனுமதி கோரிய பட்டாசு உரிமையாளர்களின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பதற்காகவும், வெடிப்பதற்காகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும், காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரங்களில் மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags: Diwali festivalsupreme court
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு !

Next Post

மது ஒழிப்பு பேரணி: சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனான ஸ்டாலின் போலீஸ்!

Related News

கோவை BSF வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்!

சங்கராபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி 200 சவரன் நகை கொள்ளை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பொதுமக்கள் போராட்டம்!

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies