நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் - பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 3, 2025, 07:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 17 சிறுவனை, பாஜக எம்.எல்.ஏ காந்தி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது 17 வயது மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுவனை வழிமறித்துள்ளனர்.

பின்னர் சீருடை அணியாத நிலையில் தங்களை ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், சிறுவனிடம் அவரது தந்தை குறித்து வினவியதாக கூறப்படுகிறது.

அப்போது தந்தை குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறிய சிறுவனை, அவர்கள் வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தப்பியோட முயன்ற சிறுவனை இருவரும் கை மற்றும் லத்தியால் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பியோடிய சிறுவன் வீட்டிற்கு சென்றபோது கழுத்து வலியால் அவதிப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் குடும்பத்தார் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சிறுவன் தரப்பில் இருந்து ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனையும், அவரது குடும்பத்தாரையும் பாஜக எம்.எல்.ஏ-வான எம்.ஆர் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை எனவும், முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை கவனமாக கையாள தவறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: MeenakshipuramBJP MLA Gandhiboy attacked by special teamNellai
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

Next Post

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies