திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு!
Jun 2, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 6 -ம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2001-2006-ம் ஆண்டு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன்.

இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 2020-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு, அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தது. அத்துடன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதற்கு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை வரும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Enforcement departmentDMK Minister
ShareTweetSendShare
Previous Post

16-ஆம் தேதி வரை ஊட்டி மலை இரயில் இரத்து: காரணம் என்ன?

Next Post

தீபாவளி பண்டிகை கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!

Related News

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

அணு ஆயுத ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பிய அமெரிக்கா!

சென்னை : வாக்கத்தானில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வகை நாய்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கேட்ஜெட்ஸ்களை விற்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொடங்கிய கூகுள்!

மேட்டூர் அருகே பாஜக-வினர் சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!

கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

ஹமாஸ் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – அமெரிக்கா

ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகளில் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்து ரீல்சாக வெளியிட்டு எல்லை மீறிய இளைஞர்கள்!

100-வது நாளில் அடியெடுத்து வைத்த டிராகன் திரைப்படம்!

ரஷ்யா : பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies