பா.ஜ.க. புயலில் காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்படும்: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. புயலில் காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்படும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க. என்னும் புயல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறியும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் வரும் 17-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சியினரும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதேசமயம், இங்கு நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அதன்படி, ஷாஜாபூரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த சில நாட்களாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆசி பெற்றேன். பா.ஜ.க. மீது காட்டும் அன்பும் நம்பிக்கையும் வியக்க வைக்கிறது. டெல்லியில் அமர்ந்து தேர்தல் கணக்கீடு செய்பவர்களால் மதிப்பீடு செய்ய முடியவில்லை.

மக்களின் அபார ஆதரவால், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. புயல் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறியும். எங்கள் மீதான உங்கள் அன்பு பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. சிலரது முகத்தில் புன்னகை மறைந்து விட்டது. அவர்கள் மிகவும் சோகமாகத் தெரிகிறார்கள். அவர்களின் தொலைக்காட்சிப் பேட்டிகளைப் பாருங்கள், அவர்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். காங்கிரஸை நீங்கள் என்ன செய்தீர்கள்.

காங்கிரஸின் சுரண்டல்களை நாட்டில் யாரும் மறக்க முடியாது. காங்கிரஸ் எங்கு வந்தாலும், அது பேரழிவை ஏற்படுத்தியது. மிகவும் சிரமப்பட்டு மத்தியப் பிரதேசத்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து பா.ஜ.க. மீட்டிருக்கிறது. காங்கிரஸுக்கு ஒரே ஒரு செயல்திட்டம்தான். அது கொள்ளை, ஊழல், பொதுமக்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் பொய்கள் ஆகியவைதான். இது அவர்களின் தந்திரம்.

காங்கிரஸிடம் உங்களுக்கு விரோதம், விரக்தி மற்றும் எதிர்மறை உணர்வுகள் மட்டுமே உள்ளன. இயல்பிலேயே காங்கிரஸானது சமாதானம், போக்கிரித்தனம், கலவரம் மற்றும் ஊழலை ஊக்குவிக்கிறது. காங்கிரஸுக்கு வலிமையோ நோக்கமோ இல்லை. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள், நாங்கள் விரைவில் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இருப்போம் என்று நம்புகிறார்கள்.

நான் 3-வது முறையாக பிரதமர் பதவியில் அமரும்போது நமது பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு வருவேன் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறேன். இந்தியா வேகமாக முன்னேறி வரும் நாடு. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் இந்தியா உலகின் ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாறப் போகிறது. பல நூற்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆற்றலும் வலிமையும் இப்போது சரியான பாதையில் முன்னேறி வருகிறது.

இந்த முக்கியமான தருணத்தில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைவது அவசியம். முதலீட்டாளர்களை விரட்டியடிக்கும் கட்சி காங்கிரஸ். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்யும் கட்சி. ஆனால், பா.ஜ.க. உழைக்கும் கட்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

Tags: PM ModiElectionMadya PradeshCompaign
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவைப் பற்றிய கருத்து மாறிவிட்டது! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Next Post

அரசுப் பணிகளை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சிப்பதை, திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies