ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - விவசாயிகள் கோரிக்கை!
Jan 13, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – விவசாயிகள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதியில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. பலத்த மழையின் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்துக் கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் என்றும்,

டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் சம்பா பருவ பயிர்களுக்கு விவசாயப் பணிக்குக் காவிரியில் போதிய நீர் கிடைக்காததால், பெருமளவில் சம்பா சாகுபடி என்பது நடைபெறாமல் உள்ளது என்றும்,

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை, வேளாண்துறை மூலம் உடனே கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தூர்வாரப்படாமல் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால்களைப் போர்க்கால
அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கையை திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், இந்த கோரிக்கையாவது உடனே நிறைவேற்ற முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது.

Tags: Paddy
ShareTweetSendShare
Previous Post

சபரிமலைக்கு சிறப்பு இரயில் – முழு விவரம்!

Next Post

70 விருதுகளைக் குவித்த சரஸ் குறும் படம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies