ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - விவசாயிகள் கோரிக்கை!
May 4, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் – விவசாயிகள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதியில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. பலத்த மழையின் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்துக் கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் என்றும்,

டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் சம்பா பருவ பயிர்களுக்கு விவசாயப் பணிக்குக் காவிரியில் போதிய நீர் கிடைக்காததால், பெருமளவில் சம்பா சாகுபடி என்பது நடைபெறாமல் உள்ளது என்றும்,

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை, வேளாண்துறை மூலம் உடனே கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தூர்வாரப்படாமல் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால்களைப் போர்க்கால
அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கையை திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், இந்த கோரிக்கையாவது உடனே நிறைவேற்ற முன்வரவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது.

Tags: Paddy
ShareTweetSendShare
Previous Post

சபரிமலைக்கு சிறப்பு இரயில் – முழு விவரம்!

Next Post

70 விருதுகளைக் குவித்த சரஸ் குறும் படம்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies