சத்தீஸ்கரில் நிச்சயம் தாமரை மலரும்: அமித்ஷா உறுதி!
Aug 19, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் நிச்சயம் தாமரை மலரும்: அமித்ஷா உறுதி!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்தது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடக்கிறது.

இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜாஞ்ச்கிர்- சம்பா மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்த முதல்கட்டத் தேர்தலிலேயே பூபேஷ் பாகல் அரசு தோல்வி அடைந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது 2-ம் கட்டத் தேர்தலிலும் தொடரும். ஆகவே, சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித்ஷா, “மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வளர்ச்சித் திட்டங்களை தந்திருக்கிறது. இது, நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

1995-ம் ஆண்டு முதல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. எனினும், சில மாதங்களிலேயே அங்குள்ள மக்கள் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். கடந்த முறை இதே காலகட்டத்தில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கண்ட மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம்.

நீங்கள் 2024 வரை காத்திருங்கள். முன்பைவிட கூடுதலான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார். மத்திய அரசின் திட்டங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 60 முதல் 70 சதவீத வாக்காளர்களின் வாழ்வில் மாற்றம் தெரிகிறது. ஜி20, சந்திரயான் நிலவை அடைந்தது போன்றவை மக்களின் வாழ்விலும் மனதிலும் பா.ஜ.க. மீதான மதிப்பை அதிகரித்திருக்கிறது..

சமீபத்தில் மோடி அரசு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தது. மோடி அரசின் நல்லாட்சியால் ஒவ்வொரு பிரிவினரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நாங்கள் வாக்குக் கேட்கிறோம். தேர்தலை மனதில் வைத்து நாங்கள் முடிவுகளை எடுப்பதில்லை. அது அரசின் கடமை” என்றார்.

Tags: Amit shaChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

வான்கடே மைதானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் !

Next Post

சச்சின் முன்னிலையில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies