திமுக அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? -அண்ணாமலை கேள்வி
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? -அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

1000 வருடங்கள் பழமையான கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயில் அமைந்திருக்கும் பகுதி இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழரால் அமைக்கப்பட்ட, 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 824 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 அடி ஆழம் கொண்ட சோழகங்கம் என்ற பொன்னேரி அமைந்துள்ள பகுதி.

ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராசு ஆகிய இருவரும் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டது பெருமைக்குரியது.

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்கம் இணைந்து ஒரு 1600 MW அனல்மின் நிலையத்தை உருவாக்க திட்டம் தீட்டினார்கள்.

1997 ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்திற்காக, ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார 13 கிராமங்களில் இருந்து 8373 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் TIDCO நிறுவனம் கையகப்படுத்தியது. அவர்களுக்கான இழப்பீடு கடந்த 25 ஆண்டுகளாகக் கொடுக்கவில்லை.

நிலப் பட்டாக்களை பெற்றுக்கொண்டு, இழப்பீடும் கொடுக்காமல் 25 ஆண்டுகள் விவசாயப் பெருமக்களைக் காத்திருக்க செய்து விட்டு, தற்போது மீண்டும் பட்டாவை திருப்பிக் கொடுத்த திமுக அரசுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது.

நிலம் கொடுத்த சில விவசாயிகள், 25 வருடங்கள் காத்திருக்க வைத்தமைக்கு இழப்பீடு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு திமுக அரசு எப்போது தீர்வு வழங்கும்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று அரியலூருக்கு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில், 26,571 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,59,129 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,44,699 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 61,042 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 89,965 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,11,694 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 1512 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல லட்சம் மக்கள் பயனடையும்படி நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது.

ஆனால் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, ஜெயங்கொண்டம் முந்திரி ஆராய்ச்சி நிலையம், உடையார்பாளையத்தில் முந்திரிப்பருப்பு தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காகிதத் தொழிற்சாலை, ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்துக்கிராமங்களுக்கும் குடிநீர் வசதி என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், 510 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjpk annamalai
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் நிலக்கரி நிறுவனத்தில் தீ: 26 பேர் பலி!

Next Post

நியூயார்க் மாகாணம்: தீபாவளி பண்டிகைக்குப் பொது விடுமுறை!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies