திமுக அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? -அண்ணாமலை கேள்வி
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? -அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

1000 வருடங்கள் பழமையான கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயில் அமைந்திருக்கும் பகுதி இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழரால் அமைக்கப்பட்ட, 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 824 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 அடி ஆழம் கொண்ட சோழகங்கம் என்ற பொன்னேரி அமைந்துள்ள பகுதி.

ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராசு ஆகிய இருவரும் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டது பெருமைக்குரியது.

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்கம் இணைந்து ஒரு 1600 MW அனல்மின் நிலையத்தை உருவாக்க திட்டம் தீட்டினார்கள்.

1997 ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்திற்காக, ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார 13 கிராமங்களில் இருந்து 8373 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் TIDCO நிறுவனம் கையகப்படுத்தியது. அவர்களுக்கான இழப்பீடு கடந்த 25 ஆண்டுகளாகக் கொடுக்கவில்லை.

நிலப் பட்டாக்களை பெற்றுக்கொண்டு, இழப்பீடும் கொடுக்காமல் 25 ஆண்டுகள் விவசாயப் பெருமக்களைக் காத்திருக்க செய்து விட்டு, தற்போது மீண்டும் பட்டாவை திருப்பிக் கொடுத்த திமுக அரசுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது.

நிலம் கொடுத்த சில விவசாயிகள், 25 வருடங்கள் காத்திருக்க வைத்தமைக்கு இழப்பீடு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு திமுக அரசு எப்போது தீர்வு வழங்கும்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று அரியலூருக்கு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில், 26,571 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,59,129 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,44,699 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 61,042 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 89,965 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,11,694 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 1512 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல லட்சம் மக்கள் பயனடையும்படி நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது.

ஆனால் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, ஜெயங்கொண்டம் முந்திரி ஆராய்ச்சி நிலையம், உடையார்பாளையத்தில் முந்திரிப்பருப்பு தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காகிதத் தொழிற்சாலை, ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்துக்கிராமங்களுக்கும் குடிநீர் வசதி என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், 510 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjpk annamalai
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவில் நிலக்கரி நிறுவனத்தில் தீ: 26 பேர் பலி!

Next Post

நியூயார்க் மாகாணம்: தீபாவளி பண்டிகைக்குப் பொது விடுமுறை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies