கேரள குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கில் “யெகோவாவின் சாட்சிகள்” என்கிற கிறிஸ்தவ மத பிரிவினரின் மாநாடு கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான 29-ம் தேதி காலை சுமார் 2,000 பேர் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும்,  50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இச்சம்பவம் கேரளா மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. எனவே, இச்சம்பவத்தில் தீவிரவாதத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த மத்திய அரசு, உடனடியாக என்.ஐ.ஏ. மற்றும் என்.எஸ்.ஜி. அதிகாரிகளை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அதே சபையின் உறுப்பினரான டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் குண்டு வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

எனினும், மார்டினை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 15-ம் தேதி அவரது காவல் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ம் தேதிவரை சிறைக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது. இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீனும் ஒருவர். இவர்தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர். இதன் மூலம் களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது.

பிரவீனின் தாய் லிபினா மற்றும் சகோதரி ரீனா ஆகியோரும் குண்டு வெடிப்பில் பலியானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tags: KeralaBomb blastdeathincreased
ShareTweetSendShare
Previous Post

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

Next Post

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் : இன்று தொடக்கம் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies