கேரள குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Sep 13, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டு வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கில் “யெகோவாவின் சாட்சிகள்” என்கிற கிறிஸ்தவ மத பிரிவினரின் மாநாடு கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான 29-ம் தேதி காலை சுமார் 2,000 பேர் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும்,  50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இச்சம்பவம் கேரளா மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. எனவே, இச்சம்பவத்தில் தீவிரவாதத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த மத்திய அரசு, உடனடியாக என்.ஐ.ஏ. மற்றும் என்.எஸ்.ஜி. அதிகாரிகளை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அதே சபையின் உறுப்பினரான டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் குண்டு வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

எனினும், மார்டினை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 15-ம் தேதி அவரது காவல் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ம் தேதிவரை சிறைக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது. இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீனும் ஒருவர். இவர்தான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர். இதன் மூலம் களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது.

பிரவீனின் தாய் லிபினா மற்றும் சகோதரி ரீனா ஆகியோரும் குண்டு வெடிப்பில் பலியானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tags: KeralaBomb blastdeathincreased
Share
Tweet
SendShare
Previous Post

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

Next Post

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் : இன்று தொடக்கம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies