உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!
Oct 3, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழாவில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புவியியல் ரீதியாக உலகளாவிய தெற்கு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், கூட்டு முயற்சியின் காரணமாக, அது முதல் முறையாக தற்போது குரல் கொடுக்கிறது.

நாங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகள். ஆனால், எங்கள் முன்னுரிமைகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின்போது, மக்களுக்காக மக்களால் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே எங்கள் முயற்சியாக இருந்தது. நாங்கள் ஜனவரியில் முதல் முறையாக உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 200-க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களில், உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதன் விளைவாக, டெல்லி பிரகடனத்தில் உலகளாவிய தெற்கின் தலைப்புகள் சேர்க்கப்பட்டு அனைவரின் ஒப்புதலைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். மேலும், இந்தியாவின் முயற்சியால் ஜி20-ல் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரான அந்த வரலாற்று தருணத்தை என்னால் மறக்க முடியாது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் நாங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்தோம். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிறகு, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி இருக்கிறோம். உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

புதிய தொழில்நுட்பம் உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு இடையே இடைவெளியை அதிகரிக்கக் கூடாது என்று இந்தியா நம்புகிறது. ஆகவே, செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும்” என்று கூறினார்.

Tags: PM Modi2-nd voice of Global south summit
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்

Next Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா வெற்றி !

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா – சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி!

கடினமான சூழல்களை தகர்த்தெறிந்து அனைவரின் நம்பிக்கையை பெற்ற ஆர்எஸ்எஸ் – ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் புகழாரம்!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் – ராஜ்நாத்சிங் கண்டனம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Load More

அண்மைச் செய்திகள்

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies