உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழாவில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புவியியல் ரீதியாக உலகளாவிய தெற்கு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், கூட்டு முயற்சியின் காரணமாக, அது முதல் முறையாக தற்போது குரல் கொடுக்கிறது.

நாங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகள். ஆனால், எங்கள் முன்னுரிமைகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின்போது, மக்களுக்காக மக்களால் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே எங்கள் முயற்சியாக இருந்தது. நாங்கள் ஜனவரியில் முதல் முறையாக உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 200-க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களில், உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதன் விளைவாக, டெல்லி பிரகடனத்தில் உலகளாவிய தெற்கின் தலைப்புகள் சேர்க்கப்பட்டு அனைவரின் ஒப்புதலைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். மேலும், இந்தியாவின் முயற்சியால் ஜி20-ல் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரான அந்த வரலாற்று தருணத்தை என்னால் மறக்க முடியாது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் நாங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்தோம். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிறகு, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி இருக்கிறோம். உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

புதிய தொழில்நுட்பம் உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு இடையே இடைவெளியை அதிகரிக்கக் கூடாது என்று இந்தியா நம்புகிறது. ஆகவே, செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும்” என்று கூறினார்.

Tags: PM Modi2-nd voice of Global south summit
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்

Next Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா வெற்றி !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies