உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!
Aug 16, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழாவில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புவியியல் ரீதியாக உலகளாவிய தெற்கு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், கூட்டு முயற்சியின் காரணமாக, அது முதல் முறையாக தற்போது குரல் கொடுக்கிறது.

நாங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகள். ஆனால், எங்கள் முன்னுரிமைகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின்போது, மக்களுக்காக மக்களால் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே எங்கள் முயற்சியாக இருந்தது. நாங்கள் ஜனவரியில் முதல் முறையாக உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 200-க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களில், உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதன் விளைவாக, டெல்லி பிரகடனத்தில் உலகளாவிய தெற்கின் தலைப்புகள் சேர்க்கப்பட்டு அனைவரின் ஒப்புதலைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். மேலும், இந்தியாவின் முயற்சியால் ஜி20-ல் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரான அந்த வரலாற்று தருணத்தை என்னால் மறக்க முடியாது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் நாங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்தோம். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிறகு, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி இருக்கிறோம். உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

புதிய தொழில்நுட்பம் உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு இடையே இடைவெளியை அதிகரிக்கக் கூடாது என்று இந்தியா நம்புகிறது. ஆகவே, செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும்” என்று கூறினார்.

Tags: PM Modi2-nd voice of Global south summit
ShareTweetSendShare
Previous Post

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்

Next Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா வெற்றி !

Related News

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies