உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழாவில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் 2-வது குரல் தொடக்க விழா இன்று நடந்தது. இம்மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புவியியல் ரீதியாக உலகளாவிய தெற்கு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், கூட்டு முயற்சியின் காரணமாக, அது முதல் முறையாக தற்போது குரல் கொடுக்கிறது.

நாங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகள். ஆனால், எங்கள் முன்னுரிமைகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின்போது, மக்களுக்காக மக்களால் மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே எங்கள் முயற்சியாக இருந்தது. நாங்கள் ஜனவரியில் முதல் முறையாக உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 200-க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களில், உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதன் விளைவாக, டெல்லி பிரகடனத்தில் உலகளாவிய தெற்கின் தலைப்புகள் சேர்க்கப்பட்டு அனைவரின் ஒப்புதலைப் பெறுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். மேலும், இந்தியாவின் முயற்சியால் ஜி20-ல் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரான அந்த வரலாற்று தருணத்தை என்னால் மறக்க முடியாது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் நாங்களும் நிதானத்தைக் கடைப்பிடித்தோம். நாங்கள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசிய பிறகு, பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி இருக்கிறோம். உலகளாவிய நலனுக்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

புதிய தொழில்நுட்பம் உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு இடையே இடைவெளியை அதிகரிக்கக் கூடாது என்று இந்தியா நம்புகிறது. ஆகவே, செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும்” என்று கூறினார்.

Tags: PM Modi2-nd voice of Global south summit
Share
Tweet
SendShare
Previous Post

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்

Next Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா வெற்றி !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies