மத்தியப் பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் மீது கல்வீச்சு!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் மீது கல்வீச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த வாக்குப்பதிவின்போது 2 வாக்குச்சாவடிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி செய்திருக்கிறது. இந்த சூழலில், இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, இம்மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தில் 64,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், பாலகாட் மாவட்டத்தின் பைஹார், லாஞ்சி, பர்ஸ்வாரா தொகுதிகள் மற்றும் மண்ட்லா, திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில சாவடிகளில் மாலை 3 மணி வரை மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த சூழலில், மொரேனா மாவட்டம் திமானி தொகுதியின் 147 மற்றும் 148 ஆகிய 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கல் வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். எனினும், பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதோடு, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 55.31 சதவீத வாக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன.

Tags: ElectionMadya PradeshChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி: மேலும் 15 நாள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!

Next Post

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies