2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! - எல் முருகன்
Oct 26, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன! – எல் முருகன்

தொழில் வழித்தடத்தின் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரித்து சென்னையும், பெங்களூரும் இரட்டை நகரங்களாக மாறும்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2023ன் தொடக்க விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்,

2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப் பட்டுள்ளதாக  கூறினார்.  பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் 16 அமைச்சகங்கள் இது தொடர்பான பணிகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.  இத்திட்டத்தின் கீழ் சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து உள்கட்டமைப்புகளும்  தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.

2014-ம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்களே  செயல்பாட்டில் இருந்ததாக கூறிய  அவர் தற்போது  74 புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அதன் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 200 விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வதாக  அவர் குறிப்பிட்டார். மெட்ரோ ரயில் வழித்தடத்தைப் பொறுத்தவரை 2014-ம்  ஆண்டு, 4 நகரங்களில் மட்டுமே இந்த வசதி இருந்தது எனவும், தற்போது 15 நகரங்களில்  மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும்  தெரிவித்தார்.

அனைவருக்கும் தரமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கழிவறை வசதிகள், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி போன்றவற்றை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு செயலாற்றி வருவதாக கூறினார்.  பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 12 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் குழாய்   இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2014-ம் ஆண்டில் நாட்டில் 500 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று கூறிய அவர், புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியா தற்போது உலகில் 3-வது இடத்தில் உள்ளதாக கூறினார். 2014-ம் ஆண்டில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேறும் என்று  தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கை, புத்தக அறிவை மட்டுமே வழங்காமல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் கல்வி கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் புதிதாக 7 ஐஐடிகள், புதிதாக 7 ஐஐஎம்-கள் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மத்திய அரசு அதிகளவில் மேம்படுத்தியுள்ளது என்று  அவர் கூறினார்.  சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிந்து தற்போது செயல்பாட்டில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்டச் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் வழித்தடத்தின் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரித்து சென்னையும், பெங்களூரும் இரட்டை நகரங்களாக மாறும் என்று  அவர் கூறினார்.

நாட்டில் 7 இடங்களில்  பிரதமரின்  மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் நிலையில், அதில் தமிழ்நாட்டின் விருதுநகரில் ஒரு ஜவுளிபூங்கா அமைக்கப்படுவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  கொள்முதல் முதல் ஏற்றுமதி வரை அனைத்திற்குமான ஒரே மையமாக இந்த ஜவுளிபூங்கா திகழும் என்று குறிப்பிட்டார்.

நாட்டின் இரண்டு மாநிலங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடம்  அமைக்கப்படுவதை குறிப்பிட்ட அவர் அதில் தமிழ்நாடும்  ஒன்று என்பதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில்  நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக அவர் கூறினார். வந்தே பாரத் ரயில்கள் மூலம் பயண நேரம் குறைவதுடன், மக்களின் வாழ்க்கை முறை எளிதாகிறது என அவர் தெரிவித்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் சமூக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப் பட்டுள்ளதுடன் அதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். அமிர்தகாலத்தின் தொடக்கத்தில் உள்ள தேசம் 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த இலக்கை எட்ட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் கேட்டுக் கொண்டார்.

Tags: L Murugancentral government minister
ShareTweetSendShare
Previous Post

சூரசம்ஹார விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Next Post

கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?

Related News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies