ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மரத்தில் கார் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் உள்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டம் பிர்னி காவல் நிலைய எல்லைக்குட்ட தோரியா கிராமத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் திகோடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் நேற்று இரவு திருமண விருந்து நடந்திருக்கிறது. இதில், தோரியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 10 பேர் ஸ்கார்பியோ காரில் வந்து கலந்து கொண்டனர்.
இரவு உணவு அருந்தி விட்டு, அதிகாலையில் புறப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியிலுள்ள பாக்மாரா அருகே அதிகாலை 3 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து அக்கம்பக்கத்தினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.