ஜார்க்கண்ட் கார் விபத்து: 5 பேர் பலி!
Jan 14, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் கார் விபத்து: 5 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மரத்தில் கார் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் உள்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டம் பிர்னி காவல் நிலைய எல்லைக்குட்ட தோரியா கிராமத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் திகோடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் நேற்று இரவு திருமண விருந்து நடந்திருக்கிறது. இதில், தோரியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 10 பேர் ஸ்கார்பியோ காரில் வந்து கலந்து கொண்டனர்.

இரவு உணவு அருந்தி விட்டு, அதிகாலையில் புறப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியிலுள்ள பாக்மாரா அருகே அதிகாலை 3 மணியளவில் கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து அக்கம்பக்கத்தினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: accidentJharkhand5 killed
ShareTweetSendShare
Previous Post

சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் : தமிழகம் அபார வெற்றி !

Next Post

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : 2-வது நாளாக தொடரும் சிகிச்சை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies