தலித்துகளுக்கு எதிரானது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!
Mar 15, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலித்துகளுக்கு எதிரானது காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ராஜஸ்தானில் இன்னும் சரியாக ஒரு வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரே ஒரு எதிரொலிதான். இதுவே இம்மாநிலத்தில் பா.ஜ.க. அரசு அமைவதற்கான மக்களின் அழைப்பு.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு அருமையான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ராஜஸ்தானை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் தீர்மானம். அதேபோல, ராஜஸ்தானில் ஊழல் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் தீர்மானமாகும்.

எல்லாவற்றும் மேலாக, நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே பா.ஜ.க.வின் தீர்மானம். ராஜஸ்தான் மாநிலத்துக்கு பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். உங்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இது இந்த மோடியின் உத்தரவாதம்.

எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் பயங்கரவாதம், அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. எல்லாமே காங்கிரஸின் சமாதான அரசியலால் வந்ததுதான். ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் எந்த நிலைக்கும் போகும். மாநிலத்தில் பெண்களின் நம்பிக்கையை காங்கிரஸ் உடைத்துவிட்டது.

பெண்கள் போலியான பலாத்கார வழக்குகளை பதிவு செய்வதாகக் கூறும் முதல்வரால், அம்மாநில பெண்களை காப்பாற்ற முடியுமா?. இப்படிப்பட்ட பெண் வெறுப்புக் கட்சியை தண்டிக்க வேண்டும். மாநில பெண்களிடம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கீழ்த்தரமான மனநிலை இருக்கிறது. ராஜஸ்தான் ஆண்களின் நாடு என்பதால் பலாத்காரம் நடக்கிறது என்கிறார்கள்.

ஒருபுறம், உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. மறுபுறம், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஊழல், கலவரம், குற்றச்செயல்களில் ராஜஸ்தானை காங்கிரஸ் முதன்மை மாநிலமாக்கி இருக்கிறது.

ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பது காங்கிரஸின் பொறுப்பு. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான குற்றங்களும், வன்கொடுமைகளும் அதிகரித்திருக்கின்றன.

ஹோலியோ, ராமநவமியோ, அனுமன் ஜெயந்தியோ, எந்தவொரு பண்டிகையையும் மக்கள் இங்கு அமைதியாக கொண்டாட முடியாது. காரணம், ராஜஸ்தானில் கலவரம், கல்வீச்சு, ஊரடங்கு உத்தரவு எல்லாம் தொடர்ந்தது. காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன. காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது.

சமீபத்தில் நாடு முதல் தலித் தலைமை தகவல் ஆணையரைப் பெற்றது. அவர் பெயர் ஹிராலால் சமாரியா. அவர்கள் தீக் கிராமத்தில் வசிப்பவர்கள். ஆனால், தலித் அதிகாரி நியமனம் காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. ஒரு தலித் அதிகாரி உயர் பதவிக்கு வருவதை காங்கிரஸால் பார்க்க முடியாது. ராம்நாத் கோவிந்தை எதிர்த்ததும், பாபா சாகேப் அம்பேத்கரை எப்போதும் அவமதித்ததும் இதே காங்கிரஸ்தான்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியின் டி20 கேப்டன் யார் ?

Next Post

திருச்செந்தூர் கோவிலில் கட்டணக் கொள்ளை – எல்.முருகன்

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies