100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!
Jun 3, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் 96 சதவிகித மக்களை, அதாவது 100 கோடி பேரை சென்றடைந்திருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்த நிலையில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) நிறுவனமும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இதில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், “நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது நிகழ்ச்சியை கேட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள். அதேபோல, 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி கொண்டிருக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். 59 சதவீதம் பேர் அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்தைச் சொல்லலாம் என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Maan ki baat100 crore peoplePM Modi
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பிரச்சினையை மறந்த திமுக : நயினார் நாகேந்திரன்

Next Post

மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப் பதிவு!

Related News

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள டிரம்ப் – ஜி ஜின்பிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies