100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!
Jul 25, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் 96 சதவிகித மக்களை, அதாவது 100 கோடி பேரை சென்றடைந்திருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்த நிலையில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) நிறுவனமும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இதில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், “நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது நிகழ்ச்சியை கேட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள். அதேபோல, 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி கொண்டிருக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். 59 சதவீதம் பேர் அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்தைச் சொல்லலாம் என்று தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiMaan ki baat100 crore people
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பிரச்சினையை மறந்த திமுக : நயினார் நாகேந்திரன்

Next Post

மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப் பதிவு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies