100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!
Jul 23, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் 96 சதவிகித மக்களை, அதாவது 100 கோடி பேரை சென்றடைந்திருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்த நிலையில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) நிறுவனமும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இதில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், “நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது நிகழ்ச்சியை கேட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள். அதேபோல, 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி கொண்டிருக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். 59 சதவீதம் பேர் அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்தைச் சொல்லலாம் என்று தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiMaan ki baat100 crore people
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பிரச்சினையை மறந்த திமுக : நயினார் நாகேந்திரன்

Next Post

மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப் பதிவு!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies