100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!
Sep 6, 2026, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 03:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் 96 சதவிகித மக்களை, அதாவது 100 கோடி பேரை சென்றடைந்திருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்த நிலையில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) நிறுவனமும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இதில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், “நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது நிகழ்ச்சியை கேட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள். அதேபோல, 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி கொண்டிருக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். 59 சதவீதம் பேர் அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்தைச் சொல்லலாம் என்று தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiMaan ki baat100 crore people
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் பிரச்சினையை மறந்த திமுக : நயினார் நாகேந்திரன்

Next Post

மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப் பதிவு!

Related News

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies