காங்கிரஸ் என்றால் ஊழல்... பா.ஜ.க. என்றால் வளர்ச்சி: ஜெ.பி.நட்டா!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் என்றால் ஊழல்… பா.ஜ.க. என்றால் வளர்ச்சி: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இடங்களில் வளர்ச்சி இருக்கிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜோத்பூரில் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஜோத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறுகையில், “ராஜஸ்தான் பண்பட்ட மக்களின் நிலம். ஆனால், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று மாநிலத்தின் ‘ஆன், பான், ஷான்’களுக்கு களங்கம் விளைவித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த விஷயங்கள் ராஜஸ்தானுக்கு கிரஹனம் போன்றது. இந்த கிரஹனம் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 3-ம் தேதிகளில் முடிவடையும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடத்தில் எல்லாம் ஊழல், கொள்ளை, முறைகேடுகள் இருக்கும். அதேசமயம், பா.ஜ.க. இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிறது. அதேபோல, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கார்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இன்று அனைத்து கார்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. உலகின் 3-வது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இருந்தியா மாறி இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் பெண்கள் மேம்பாட்டிற்காக காஸ் சிலிண்டருக்கு 450 ரூபாய் மானியம் வழங்க முயற்சிப்போம். புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் பத்திரம் வழங்கப்படும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், மதிய உணவு, சுரங்கம் மற்றும் உரம் போன்றவற்றில் ஊழல் செய்தவர்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்றார்.

Tags: ElectionJ.P.NaddaRajastanCompaign
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!

Next Post

பி.ஆர்.எஸ். 2ஜி, ஒவைசி 3ஜி, காங்கிரஸ் 4ஜி: அமித்ஷா விமர்சனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies