காங்கிரஸ் என்றால் ஊழல்... பா.ஜ.க. என்றால் வளர்ச்சி: ஜெ.பி.நட்டா!
Sep 30, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் என்றால் ஊழல்… பா.ஜ.க. என்றால் வளர்ச்சி: ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இடங்களில் வளர்ச்சி இருக்கிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜோத்பூரில் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஜோத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறுகையில், “ராஜஸ்தான் பண்பட்ட மக்களின் நிலம். ஆனால், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று மாநிலத்தின் ‘ஆன், பான், ஷான்’களுக்கு களங்கம் விளைவித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த விஷயங்கள் ராஜஸ்தானுக்கு கிரஹனம் போன்றது. இந்த கிரஹனம் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 3-ம் தேதிகளில் முடிவடையும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடத்தில் எல்லாம் ஊழல், கொள்ளை, முறைகேடுகள் இருக்கும். அதேசமயம், பா.ஜ.க. இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிறது. அதேபோல, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கார்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இன்று அனைத்து கார்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. உலகின் 3-வது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இருந்தியா மாறி இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் பெண்கள் மேம்பாட்டிற்காக காஸ் சிலிண்டருக்கு 450 ரூபாய் மானியம் வழங்க முயற்சிப்போம். புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 2 லட்சம் ரூபாய் பத்திரம் வழங்கப்படும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், மதிய உணவு, சுரங்கம் மற்றும் உரம் போன்றவற்றில் ஊழல் செய்தவர்கள் மீது விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்றார்.

Tags: ElectionJ.P.NaddaRajastanCompaign
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!

Next Post

பி.ஆர்.எஸ். 2ஜி, ஒவைசி 3ஜி, காங்கிரஸ் 4ஜி: அமித்ஷா விமர்சனம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies