திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் பிரபல நகைக்கடைகள் உள்ளன. இதில் 4 கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலையில் மொத்தம் 6 வாகனங்களில் வந்த அதிகாரிகள், தலா 5 பேர் வீதம் 4 கடைகளுக்குப் பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது, 10 -க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, சென்னையில் நேற்று முதல் நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சோதனைக்கு உள்ளாகியுள்ள நகைக்கடை அதிபர்கள் அரசியல் பின்புலம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.