ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!
Sep 12, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் பகவத் கீதையின் ‘ஆன்மா அழியாதது’ என்கிற உபதேசம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முப்படை தளபதி பிபின் ராவத், தனது மனைவி மதுலிகாவுடன் வருகை தந்தார்.

விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர்கள், சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உட்பட 12 இராணுவ அதிகாரிகளும் சென்றனர்.

அந்த ஹெலிகாப்படர் திடீரென சூழ்ந்த மேகக்கூட்டங்கள் காரணமாக, நஞ்சப்பா சத்திரம் என்கிற கிராமத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து விழுந்து நொறுங்கியது.

இச்சம்பவத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் நினைவாக விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க வெலிங்டன் இராணுவ மையம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நினைவுத் தூண் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த நினைவுத் தூண் 2-ம் ஆண்டு நினைவு தினமான வரும் டிசம்பர் 8-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

இந்த நினைவுத் தூணில், ‘ஸ்மிரிதிகா’ என்கிற தலைப்பில், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பகவத் கீதையின் 2:23 உபதேச வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் கீழே உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், ‘ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்த்த முடியாது’ என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: MemorialNilgirisHelicopter Crash
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி: பிரபல நகைக்கடைகளில் E.D. அதிகாரிகள் திடீர் சோதனை!

Next Post

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு – முழு விவரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies