ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!
Apr 29, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் பகவத் கீதையின் ‘ஆன்மா அழியாதது’ என்கிற உபதேசம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முப்படை தளபதி பிபின் ராவத், தனது மனைவி மதுலிகாவுடன் வருகை தந்தார்.

விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர்கள், சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உட்பட 12 இராணுவ அதிகாரிகளும் சென்றனர்.

அந்த ஹெலிகாப்படர் திடீரென சூழ்ந்த மேகக்கூட்டங்கள் காரணமாக, நஞ்சப்பா சத்திரம் என்கிற கிராமத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து விழுந்து நொறுங்கியது.

இச்சம்பவத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் நினைவாக விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க வெலிங்டன் இராணுவ மையம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நினைவுத் தூண் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த நினைவுத் தூண் 2-ம் ஆண்டு நினைவு தினமான வரும் டிசம்பர் 8-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

இந்த நினைவுத் தூணில், ‘ஸ்மிரிதிகா’ என்கிற தலைப்பில், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பகவத் கீதையின் 2:23 உபதேச வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் கீழே உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், ‘ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்த்த முடியாது’ என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: MemorialNilgirisHelicopter Crash
ShareTweetSendShare
Previous Post

திருச்சி: பிரபல நகைக்கடைகளில் E.D. அதிகாரிகள் திடீர் சோதனை!

Next Post

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு – முழு விவரம்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies