காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் முடிவு: அமித்ஷா!
Mar 15, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் முடிவு: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 23, 2023, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பிரியாவிடை கொடுக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆகவே, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும், பா.ஜ.க. 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனவே, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

இந்த சூழலில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்ட உத்திகளுடன் வகுப்புவாத மோதல்கள் நடந்தன.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் சாப்ரா, பில்வாரா, கரௌலி, ஜோத்பூர், சித்தோர்கர், நோஹர், மேவாட், மல்புரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் திட்டமிட்ட கலவரங்கள் நடந்தன. ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலவரக்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சமாதான அரசியலில் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. அதேபோல, சலாசரில் இராமர் கோவில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. ஆல்வாரில் துளையிடும் இயந்திரம் மூலம் சிவலிங்கம் உடைக்கப்பட்டது. கத்துமாரில் பசுக் கொட்டகை புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது.

இதுபோன்ற பல சம்பவங்களை ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். லால் டைரி காங்கிரஸின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை.

இது தவிர, அமைச்சரின் பீரோவில் இருந்து 2.35 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்று முதல்வர் அசோக் கெலாட் எதிர்வினையாற்றுகிறார். இவ்வளவு பெரிய ஊழலை செய்துவிட்டு, மிகவும் சாதாரணமாக நடந்து கொள்ளும் யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை.

கடந்த 6 மாதங்களாக நான் ராஜஸ்தானுக்கு விஜயம் செய்து வருகிறேன். குறிப்பாக, மாநிலம் முழுவதும் சென்று வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன், ராஜஸ்தானில் அடுத்த அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உருவாகிறது.

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும் என்கிற மனநிலையிலேயே மக்கள் இருக்கிறார்கள். ஆகவே, மூலை முடுக்கெல்லாம் தோல்வியை பரிசாகக் கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பிரியாவிடை அளிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

Tags: ElectionRajasthanAmit shaCompaign
ShareTweetSendShare
Previous Post

2-வது முறையாக சிக்கிய ஏர் இந்தியா – ரூ. 10 லட்சம் அபராதம் விதிப்பு – என்ன காரணம்?

Next Post

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies