காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் முடிவு: அமித்ஷா!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுக்க மக்கள் முடிவு: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 23, 2023, 03:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு பிரியாவிடை கொடுக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆகவே, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும், பா.ஜ.க. 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனவே, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

இந்த சூழலில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்ட உத்திகளுடன் வகுப்புவாத மோதல்கள் நடந்தன.

குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் சாப்ரா, பில்வாரா, கரௌலி, ஜோத்பூர், சித்தோர்கர், நோஹர், மேவாட், மல்புரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் திட்டமிட்ட கலவரங்கள் நடந்தன. ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலவரக்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு சமாதான அரசியலில் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. அதேபோல, சலாசரில் இராமர் கோவில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. ஆல்வாரில் துளையிடும் இயந்திரம் மூலம் சிவலிங்கம் உடைக்கப்பட்டது. கத்துமாரில் பசுக் கொட்டகை புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது.

இதுபோன்ற பல சம்பவங்களை ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். லால் டைரி காங்கிரஸின் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை.

இது தவிர, அமைச்சரின் பீரோவில் இருந்து 2.35 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் எடுக்கப்பட்டது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்று முதல்வர் அசோக் கெலாட் எதிர்வினையாற்றுகிறார். இவ்வளவு பெரிய ஊழலை செய்துவிட்டு, மிகவும் சாதாரணமாக நடந்து கொள்ளும் யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை.

கடந்த 6 மாதங்களாக நான் ராஜஸ்தானுக்கு விஜயம் செய்து வருகிறேன். குறிப்பாக, மாநிலம் முழுவதும் சென்று வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன், ராஜஸ்தானில் அடுத்த அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உருவாகிறது.

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும் என்கிற மனநிலையிலேயே மக்கள் இருக்கிறார்கள். ஆகவே, மூலை முடுக்கெல்லாம் தோல்வியை பரிசாகக் கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு ராஜஸ்தான் மக்கள் பிரியாவிடை அளிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

Tags: ElectionRajasthanAmit shaCompaign
Share
Tweet
SendShare
Previous Post

2-வது முறையாக சிக்கிய ஏர் இந்தியா – ரூ. 10 லட்சம் அபராதம் விதிப்பு – என்ன காரணம்?

Next Post

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies