தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!
Sep 30, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தியோகர் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க.வின் பலத்தை அறியாதவர்கள் பலர் உள்ளனர். மோடியை திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வை உருவாக்கியது எங்கள் கட்சித் தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

எங்களது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் பா.ஜ.க.வின் கொடியை உயர்த்திப் பிடிக்கும் விதம் பாராட்டுக்குரியது. இதை நான் மாநிலம் முழுவதும் பார்த்திருக்கிறேன். ராஜஸ்தானில் உள்ள பெண்கள் காங்கிரஸை ஒரு கணம் கூட பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

தற்போதைய அரசில் நடந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் போல ராஜஸ்தான் மாநிலம் இதுவரை பார்த்ததில்லை. ராஜஸ்தானின் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நான் நேற்று உறுதியாகச் சொன்னேன். ராஜஸ்தானை கலவரம், குற்றம், ஊழல், வினாத்தாள் கசிவு ஆகியவற்றில் நம்பர் 1 இடத்திற்கு காங்கிரஸ் கட்சி உயர்த்தி இருக்கிறது.

அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்துவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தியது. டிசம்பர் 3-ம் தேதி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.45 அடியாக அதிகரிப்பு!

Next Post

முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!

Related News

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies