தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!
Mar 15, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 23, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தியோகர் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க.வின் பலத்தை அறியாதவர்கள் பலர் உள்ளனர். மோடியை திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வை உருவாக்கியது எங்கள் கட்சித் தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

எங்களது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் பா.ஜ.க.வின் கொடியை உயர்த்திப் பிடிக்கும் விதம் பாராட்டுக்குரியது. இதை நான் மாநிலம் முழுவதும் பார்த்திருக்கிறேன். ராஜஸ்தானில் உள்ள பெண்கள் காங்கிரஸை ஒரு கணம் கூட பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

தற்போதைய அரசில் நடந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் போல ராஜஸ்தான் மாநிலம் இதுவரை பார்த்ததில்லை. ராஜஸ்தானின் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நான் நேற்று உறுதியாகச் சொன்னேன். ராஜஸ்தானை கலவரம், குற்றம், ஊழல், வினாத்தாள் கசிவு ஆகியவற்றில் நம்பர் 1 இடத்திற்கு காங்கிரஸ் கட்சி உயர்த்தி இருக்கிறது.

அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்துவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தியது. டிசம்பர் 3-ம் தேதி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.45 அடியாக அதிகரிப்பு!

Next Post

முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies