தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!
Nov 15, 2025, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு வருகிற 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று தியோகர் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க.வின் பலத்தை அறியாதவர்கள் பலர் உள்ளனர். மோடியை திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வை உருவாக்கியது எங்கள் கட்சித் தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

எங்களது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் பா.ஜ.க.வின் கொடியை உயர்த்திப் பிடிக்கும் விதம் பாராட்டுக்குரியது. இதை நான் மாநிலம் முழுவதும் பார்த்திருக்கிறேன். ராஜஸ்தானில் உள்ள பெண்கள் காங்கிரஸை ஒரு கணம் கூட பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

தற்போதைய அரசில் நடந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் போல ராஜஸ்தான் மாநிலம் இதுவரை பார்த்ததில்லை. ராஜஸ்தானின் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது என்று நான் நேற்று உறுதியாகச் சொன்னேன். ராஜஸ்தானை கலவரம், குற்றம், ஊழல், வினாத்தாள் கசிவு ஆகியவற்றில் நம்பர் 1 இடத்திற்கு காங்கிரஸ் கட்சி உயர்த்தி இருக்கிறது.

அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்துவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தியது. டிசம்பர் 3-ம் தேதி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.45 அடியாக அதிகரிப்பு!

Next Post

முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies