மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!
Jan 13, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கே.சி.ஆர். முதல்வராக இருந்தும், மாநிலத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.

ஆகவே, மாநில மக்களும் கே.சி.ஆர். மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால், தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் அம்மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்படி, இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூர் நகரில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல்வர் கே.சி.ஆர்., தனது மகன் கே.டி.ஆருக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் செய்த குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

கே.சி.ஆர். செய்த அனைத்து மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும். ஊழல் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கைப்பற்றி, வணிக வளாகங்களை கட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கே.சி.ஆர். தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறார். இதன் மூலம் பி.ஆர்.எஸ். கட்சி தேர்தல் சீட்டை வியாபாரம் செய்கிறது.

ரசாகர்கள் (முஸ்லீம் பிரிவினர்) மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் மீதான பயத்தால், ஐதராபாத் விடுதலை தினத்தை கே.சி.ஆர். கொண்டாடவில்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் விடுதலை தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் உற்சாகமாக கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளில், தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.எஸ்.பி.எஸ்.சி.) கீழ் 6 பிரிவுகளில் தேர்வுத் தாள்கள் கசிந்தன. ஆகவே, வினாத் தாள் கசிவு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவைச் சேர்ந்த 2.5 லட்சம் இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

அதேபோல, பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும். இங்கு தேசிய மஞ்சள் வாரியத்தை அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். இதன் மூலம் மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கும். அதோடு, மதிப்பு சங்கிலியை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்கும். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்போம்” என்றார்.

Tags: ElectionTelanganaAmit shaCompaign
ShareTweetSendShare
Previous Post

மும்பை விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு மிரட்டல் !

Next Post

புதிய சிம்கார்டு வாங்க கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசின் புதிய விதிகள் சொல்வது என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies