மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!
Jul 29, 2025, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!

Web Desk by Web Desk
Nov 24, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கே.சி.ஆர். முதல்வராக இருந்தும், மாநிலத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.

ஆகவே, மாநில மக்களும் கே.சி.ஆர். மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால், தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் அம்மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்படி, இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூர் நகரில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல்வர் கே.சி.ஆர்., தனது மகன் கே.டி.ஆருக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் செய்த குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

கே.சி.ஆர். செய்த அனைத்து மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும். ஊழல் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கைப்பற்றி, வணிக வளாகங்களை கட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கே.சி.ஆர். தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறார். இதன் மூலம் பி.ஆர்.எஸ். கட்சி தேர்தல் சீட்டை வியாபாரம் செய்கிறது.

ரசாகர்கள் (முஸ்லீம் பிரிவினர்) மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் மீதான பயத்தால், ஐதராபாத் விடுதலை தினத்தை கே.சி.ஆர். கொண்டாடவில்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் விடுதலை தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் உற்சாகமாக கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளில், தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.எஸ்.பி.எஸ்.சி.) கீழ் 6 பிரிவுகளில் தேர்வுத் தாள்கள் கசிந்தன. ஆகவே, வினாத் தாள் கசிவு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவைச் சேர்ந்த 2.5 லட்சம் இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

அதேபோல, பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும். இங்கு தேசிய மஞ்சள் வாரியத்தை அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். இதன் மூலம் மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கும். அதோடு, மதிப்பு சங்கிலியை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்கும். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்போம்” என்றார்.

Tags: ElectionTelanganaAmit shaCompaign
ShareTweetSendShare
Previous Post

மும்பை விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு மிரட்டல் !

Next Post

புதிய சிம்கார்டு வாங்க கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசின் புதிய விதிகள் சொல்வது என்ன?

Related News

இந்தியா – வங்கதேச சா்வதேச எல்லையில் BSF வீரர்களுக்காக உடலில் பொருத்தும் கேமரா அனுப்பிவைப்பு!

கோவை : ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை : நீண்ட நேரம் போராடி கரையை கடந்த காட்டு யானை!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

ஜெர்மனி : 1970-ல் கட்டப்பட்ட 22 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 25 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கலைஞர் அறிவாலயம்!

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

எலிகளை மாணவர்களுக்கே சமைத்து கொடுக்க வேண்டியது தானே – திமுக கவுன்சிலர் சர்ச்சை பேச்சு!

மகளிர் ஐரோப்பியக் கால்பந்து இறுதிப்போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

திருவள்ளூர் : பூமி பூஜையின் போது அறுகம்புல் கேட்ட அமைச்சர் நாசர்!

சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக் – வீடியோ காலில் பாராட்டிய நிதின் கட்கரி!

குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மம்தா குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு!

நெல்லை அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை சுட்டுப்பிடித்த போலீசார்!

துல்கர் சல்மான் நடிக்கும் “காந்தா” படத்தின் டீசர் வெளியீடு!

நிமிஷா மரண தண்டனையை ஏமன் அரசு ரத்து செய்ததாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies