மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!
Mar 15, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனுக்காக கோடிகளை குவித்த கே.சி.ஆர்.: அமித்ஷா விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளில் மகனுக்காக கோடிகளை குவித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கே.சி.ஆர். முதல்வராக இருந்தும், மாநிலத்துக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.

ஆகவே, மாநில மக்களும் கே.சி.ஆர். மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால், தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் அம்மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்படி, இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூர் நகரில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல்வர் கே.சி.ஆர்., தனது மகன் கே.டி.ஆருக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் செய்த குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

கே.சி.ஆர். செய்த அனைத்து மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும். ஊழல் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கைப்பற்றி, வணிக வளாகங்களை கட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு கே.சி.ஆர். தேர்தலில் சீட் வழங்கி இருக்கிறார். இதன் மூலம் பி.ஆர்.எஸ். கட்சி தேர்தல் சீட்டை வியாபாரம் செய்கிறது.

ரசாகர்கள் (முஸ்லீம் பிரிவினர்) மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் மீதான பயத்தால், ஐதராபாத் விடுதலை தினத்தை கே.சி.ஆர். கொண்டாடவில்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் விடுதலை தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் உற்சாகமாக கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளில், தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.எஸ்.பி.எஸ்.சி.) கீழ் 6 பிரிவுகளில் தேர்வுத் தாள்கள் கசிந்தன. ஆகவே, வினாத் தாள் கசிவு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவைச் சேர்ந்த 2.5 லட்சம் இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

அதேபோல, பா.ஜ.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும். இங்கு தேசிய மஞ்சள் வாரியத்தை அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார். இதன் மூலம் மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கும். அதோடு, மதிப்பு சங்கிலியை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்கும். மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்போம்” என்றார்.

Tags: ElectionTelanganaAmit shaCompaign
ShareTweetSendShare
Previous Post

மும்பை விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு மிரட்டல் !

Next Post

புதிய சிம்கார்டு வாங்க கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசின் புதிய விதிகள் சொல்வது என்ன?

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies