மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா: அமித்ஷா குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா: அமித்ஷா குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானாதான். ஆகவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரவினருக்கு வழங்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தெலங்கானா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இக்கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெலங்கானா மாநிலம் சோமாஜி குடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீண்ட போராட்டத்தின் பின்னணியில் தெலங்கானா உருவானதால், இம்மாநிலத்துக்கும், மக்களுக்கும் இத்தேர்தல் மிகவும் முக்கியமானது.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, ​​ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலங்கானா தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனில் சிக்கி இருப்பதைக் காண்கிறோம். இந்த 10 ஆண்டுகளில் பி.ஆர்.எஸ். கட்சி ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

மிஷன் பகீரத ஊழல், பாஸ்போர்ட் ஊழல், 4,000 கோடி மியாபூர் நில ஊழல், காலேஸ்வரம் திட்ட ஊழல், மதுபான ஊழல், கிரானைட் ஊழல் என ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று மக்கள் நம்புகிறார்கள். 2 பெட்ரூம் வீட்டுத் திட்டத்திற்காக பி.ஆர்.எஸ். கட்சியினர் தலித் மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள். இவை அனைத்தும் தெலங்கானா மக்களுக்குத் தெரியும்.

மேலும், சமாதான அரசியலிலும் கே.சி.ஆர். ஈடுபட்டு வருவதால் அவரது அரசுக்கு எதிராக மக்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள். சமாதான அரசியலால் ஐதராபாத் விடுதலை நாளைக் கொண்டாடுவோம் என்கிற வாக்குறுதியை கே.சி.ஆர். உடைத்து விட்டார்.

நமது அரசியலமைப்புச் சட்டம் யாருக்கும் சிறப்புச் சலுகை அளிக்கவில்லை. ஆனால், நாட்டில் மத ரீதியான இடஒதுக்கீடு வழங்கும் ஒரே ஒரு மாநிலம் தெலங்கானா மட்டுமே. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4% முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கு வழங்கி நீதியை நிலைநாட்டுவோம்.

கே.சி.ஆர். ஆட்சியில் மாநில இளைஞர்கள் மனமுடைந்து போய் இருக்கிறார்கள். விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இதனால், தெலங்கானாவின் எதிர்காலம் குறித்து சந்தேகம் நிலவுகிறது. எனவே, அனைத்து கட்சிகளின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்து வாக்களியுங்கள்.

உங்கள் வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலங்கானா மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். ஆகவே, ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி வாக்களிக்கும்போது நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

Tags: ElectionTelanganaAmit shaCompaign
ShareTweetSendShare
Previous Post

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Post

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies