அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!
Jun 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், திட்டமிட்டபடி 29-ம் தேதி பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வரும் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு அனுமதி கோரி, மாநில பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், குறித்த காலக்கெடுவுக்குள் அனுமதி கோரவில்லை என்று சொல்லி போலீஸார் அனுமதி தர மறுத்து விட்டனர். இதை எதிர்த்து பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஹிரன்மய் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்கத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடப்பது வழக்கமானதுதான்.

மேலும், அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட எத்தனையோ பொதுக் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. அப்படி இருக்க, ஒரு குறிப்பிட்ட கட்சியின் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்க முடியாது. ஆகவே, தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு சரியானது. அதில் நாங்கள் தலையிட முகாந்திரம் இல்லை.

மேலும், பொதுக்கூட்டத்திற்கு என போலீஸார் வகுத்திருக்கும் 28 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம், அமித்ஷாவின் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: courtwest bengalmeetingAmit sha
ShareTweetSendShare
Previous Post

மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா: அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

ஹாக்கி தமிழகம் : அரையிறுதிக்கு தகுதி !

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies