அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!
Apr 29, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், திட்டமிட்டபடி 29-ம் தேதி பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வரும் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு அனுமதி கோரி, மாநில பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், குறித்த காலக்கெடுவுக்குள் அனுமதி கோரவில்லை என்று சொல்லி போலீஸார் அனுமதி தர மறுத்து விட்டனர். இதை எதிர்த்து பா.ஜ.க. தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஹிரன்மய் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்கத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடப்பது வழக்கமானதுதான்.

மேலும், அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட எத்தனையோ பொதுக் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. அப்படி இருக்க, ஒரு குறிப்பிட்ட கட்சியின் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்க முடியாது. ஆகவே, தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு சரியானது. அதில் நாங்கள் தலையிட முகாந்திரம் இல்லை.

மேலும், பொதுக்கூட்டத்திற்கு என போலீஸார் வகுத்திருக்கும் 28 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம், அமித்ஷாவின் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: courtwest bengalmeetingAmit sha
ShareTweetSendShare
Previous Post

மத ரீதியான இட ஒதுக்கீடு வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா: அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

ஹாக்கி தமிழகம் : அரையிறுதிக்கு தகுதி !

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies