விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!
Sep 27, 2025, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!

கனடாவுக்கான இந்தியத் தூதர் வேதனை!

Web Desk by Web Desk
Nov 25, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா வேதனை தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார். இவர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலையில் கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கனடாவில் இருக்கும் 2 தூதர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இதனிடையே, கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தபோதும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேற உத்தரவிட்டார்.

பதிலுக்கு இந்தியாவும் கனடா நாட்டின் தூதரை வெளியேற்றியது. மேலும், கனட பிரஜைகளுக்கு இந்திய விசா வழங்குவதை தற்காலிக நிறுத்தி வைத்ததோடு, கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. இதனால், 42 கனடா தூதர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மேற்கண்ட விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா முதல்முறையாக கனட ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில் சஞ்சய் குமார் வர்மா, “ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவடையாத நிலையில், இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா? கிரிமினல் அகராதிப்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், அதற்கு நீங்கள் ஏற்கெனவே குற்றவாளியாக ஆக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

எனவே, நாங்கள் அதை மிகவும் வித்தியாசமான விளக்கத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால், குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருந்தால், அதனை எங்களிடம் பகிருங்கள். அது குறித்து ஆராய்கிறோம் என்று உறுதியுடன் கூறுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Canadaindian envoyKhalistanikillingResponce
ShareTweetSendShare
Previous Post

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடு : அண்ணாமலை

Next Post

வாயை மூடுங்கள் : ஜோகோவிச் ஆவேசம் !

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies