விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!

கனடாவுக்கான இந்தியத் தூதர் வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா வேதனை தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார். இவர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலையில் கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கனடாவில் இருக்கும் 2 தூதர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இதனிடையே, கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தபோதும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேற உத்தரவிட்டார்.

பதிலுக்கு இந்தியாவும் கனடா நாட்டின் தூதரை வெளியேற்றியது. மேலும், கனட பிரஜைகளுக்கு இந்திய விசா வழங்குவதை தற்காலிக நிறுத்தி வைத்ததோடு, கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. இதனால், 42 கனடா தூதர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மேற்கண்ட விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா முதல்முறையாக கனட ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில் சஞ்சய் குமார் வர்மா, “ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவடையாத நிலையில், இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா? கிரிமினல் அகராதிப்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், அதற்கு நீங்கள் ஏற்கெனவே குற்றவாளியாக ஆக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

எனவே, நாங்கள் அதை மிகவும் வித்தியாசமான விளக்கத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால், குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருந்தால், அதனை எங்களிடம் பகிருங்கள். அது குறித்து ஆராய்கிறோம் என்று உறுதியுடன் கூறுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Canadaindian envoyKhalistanikillingResponce
ShareTweetSendShare
Previous Post

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடு : அண்ணாமலை

Next Post

வாயை மூடுங்கள் : ஜோகோவிச் ஆவேசம் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies