விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!
Sep 12, 2026, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!

கனடாவுக்கான இந்தியத் தூதர் வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா வேதனை தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார். இவர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலையில் கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கனடாவில் இருக்கும் 2 தூதர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இதனிடையே, கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தபோதும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேற உத்தரவிட்டார்.

பதிலுக்கு இந்தியாவும் கனடா நாட்டின் தூதரை வெளியேற்றியது. மேலும், கனட பிரஜைகளுக்கு இந்திய விசா வழங்குவதை தற்காலிக நிறுத்தி வைத்ததோடு, கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. இதனால், 42 கனடா தூதர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மேற்கண்ட விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா முதல்முறையாக கனட ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில் சஞ்சய் குமார் வர்மா, “ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவடையாத நிலையில், இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா? கிரிமினல் அகராதிப்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், அதற்கு நீங்கள் ஏற்கெனவே குற்றவாளியாக ஆக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

எனவே, நாங்கள் அதை மிகவும் வித்தியாசமான விளக்கத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால், குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருந்தால், அதனை எங்களிடம் பகிருங்கள். அது குறித்து ஆராய்கிறோம் என்று உறுதியுடன் கூறுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Canadaindian envoyKhalistanikillingResponce
Share
Tweet
SendShare
Previous Post

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடு : அண்ணாமலை

Next Post

வாயை மூடுங்கள் : ஜோகோவிச் ஆவேசம் !

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies