விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!
Jul 29, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!

கனடாவுக்கான இந்தியத் தூதர் வேதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா வேதனை தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார். இவர், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள குருத்துவாரா முன்பு கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலையில் கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், கனடாவில் இருக்கும் 2 தூதர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இதனிடையே, கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தபோதும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதரை வெளியேற உத்தரவிட்டார்.

பதிலுக்கு இந்தியாவும் கனடா நாட்டின் தூதரை வெளியேற்றியது. மேலும், கனட பிரஜைகளுக்கு இந்திய விசா வழங்குவதை தற்காலிக நிறுத்தி வைத்ததோடு, கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது. இதனால், 42 கனடா தூதர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் கனடா இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மேற்கண்ட விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா முதல்முறையாக கனட ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில் சஞ்சய் குமார் வர்மா, “ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவடையாத நிலையில், இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா? கிரிமினல் அகராதிப்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருவர் கூறினால், அதற்கு நீங்கள் ஏற்கெனவே குற்றவாளியாக ஆக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

எனவே, நாங்கள் அதை மிகவும் வித்தியாசமான விளக்கத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால், குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருந்தால், அதனை எங்களிடம் பகிருங்கள். அது குறித்து ஆராய்கிறோம் என்று உறுதியுடன் கூறுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Canadaindian envoyKhalistanikillingResponce
ShareTweetSendShare
Previous Post

ஆவின் நிறுவனத்தில் தொடரும் முறைகேடு : அண்ணாமலை

Next Post

வாயை மூடுங்கள் : ஜோகோவிச் ஆவேசம் !

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies