நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
Aug 19, 2025, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் 15 அமர்வுகளாக நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த 9-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

பொதுவாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகளாக நடைபெறும். ஆனால், தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் கூட்டத்தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. வழக்கமாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்.

ஆனால், டிசம்பர் 3-ம் தேதி மேற்கண்ட 5 மாநிலங்களில் பதிவாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. ஆகவே, ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த கூட்டத்தொடரில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, தேர்தல் ஆணையம் நியமனம் தொடர்பாக மசோதா நிலுவையில் இருந்து வருகிறது. இதுவும் இக்கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். மேலும், நிலுவையிலுள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொள்ளும்.

அதோடு, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

Tags: ParliamentAll party meetingDecember 2nd
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் தேர்தல்: 74.13% வாக்குப்பதிவு!

Next Post

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies