நாட்டின் திறன், துணிச்சல் தீவிரவாதத்தை நசுக்கி விட்டது: பிரதமர் மோடி!
Sep 9, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் திறன், துணிச்சல் தீவிரவாதத்தை நசுக்கி விட்டது: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நமது நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான் அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது என்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்கிற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 100-வது எபிசோடை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், நவம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று நடந்த மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது, தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

நாட்டில் கொடூரத் தாக்குதல் நடந்த தினம் இன்று. ஆனால், நம் நாட்டின் திறன் மற்றும் துணிச்சல்தான், அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு, தீவிரவாதத்தை நசுக்கியது. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம், இன்றைய தினம் மற்றொரு முக்கியமான நாளாகும். 1949-ம் ஆண்டு இதே நாளில்தான், அரசியல் அமைப்பை, அரியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது.

ஆகவே, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைத் உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களானது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமாகி இருக்கிறது. உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவு பிரசாரம்தான், நாட்டிற்கு பல வாய்ப்புகளை திறந்திருக்கிறது.

நமது பொருளாதாரத்திற்கு வலிமையை அளித்திருக்கிறது. நாட்டின் சமமான வளர்ச்சியை உறுதி செய்திருக்கிறது.

சர்வதேச பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு கண்டபோது, உள்ளூர் பொருட்களுக்கான நமது ஆதரவானது, இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க உதவியது.

மேலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பு. தண்ணீரைப் பாதுகாப்பது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் குறைவானதல்ல.

தண்ணீரை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு. தேசத்தை கட்டியெழுப்புவதில் பொதுமக்களும் பங்கு கொள்ளும்போது, அது நாட்டை முன்னேற்ற பாதைக்குக் கூட்டி செல்கிறது. இன்று, இந்தியாவில் மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா நிறைய சாதனைகளை புரிந்திருக்கிறது.

மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, 2-வது ஆண்டாக ரொக்கமாக பணம் செலுத்தும் பழக்கம் குறைந்திருக்கிறது. மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வருகின்றனர். டிஜிட்டல் புரட்சியின் வெற்றி இதை சாத்தியமாக்கி இருக்கிறது.

இன்னொரு காரியம் செய்யலாம், ஒரு மாதத்திற்கு யு.பி.ஐ. மூலமாகவோ அல்லது எந்தவொரு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்துவது என்று முடிவு செய்யுங்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, உங்கள் அனுபவங்களையும் புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.

Tags: pm modi speechMaan ki baatNovember 26
ShareTweetSendShare
Previous Post

இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கும் சமந்தா!

Next Post

டெல்டாகாரன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies