அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!
Mar 15, 2026, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்பது உட்பட சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அந்த சம்மனில், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், “பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் நான் மிகவும் வேதனையடைந்து வழக்குத் தொடர்ந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்திருக்கிறது” என்றார்.

மேலும், விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்” என்றார்.

ஏற்கெனவே மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு, மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: courtrahul gandhiAmit shaNotice
ShareTweetSendShare
Previous Post

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 : தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies