அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!
Aug 19, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்பது உட்பட சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அந்த சம்மனில், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், “பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் நான் மிகவும் வேதனையடைந்து வழக்குத் தொடர்ந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்திருக்கிறது” என்றார்.

மேலும், விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்” என்றார்.

ஏற்கெனவே மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு, மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: courtrahul gandhiAmit shaNotice
ShareTweetSendShare
Previous Post

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 : தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies