அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்பது உட்பட சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அந்த சம்மனில், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், “பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் நான் மிகவும் வேதனையடைந்து வழக்குத் தொடர்ந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்திருக்கிறது” என்றார்.

மேலும், விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்” என்றார்.

ஏற்கெனவே மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு, மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: courtrahul gandhiAmit shaNotice
ShareTweetSendShare
Previous Post

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 : தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies