அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!
Sep 12, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்பது உட்பட சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

அந்த சம்மனில், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், “பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் நான் மிகவும் வேதனையடைந்து வழக்குத் தொடர்ந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்திருக்கிறது” என்றார்.

மேலும், விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்” என்றார்.

ஏற்கெனவே மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு, மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: courtrahul gandhiAmit shaNotice
Share
Tweet
SendShare
Previous Post

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 : தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies