தேனி மாவட்டம் கம்பம் அருகே கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம். இவர் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் வீர தீரத்துடன் செயல்பட்டதற்காக கீர்த்தி சக்ரா விருது வழங்கி குடியரசுத்தலைவர் கௌரவித்தார். இந்நிலையில் விருது பெற்ற பின்னர் சொந்த ஊருக்கு வந்த லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரத்தை, கிராம மக்கள் தாரை தப்பட்டை முழங்க, வானவேடிக்கையுடன், மலர்மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
















