சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது தனக்கு 79 வயதாவதாகவும், அடுத்த தேர்தலின்போது 81 அல்லது 82 வயதாகிவிடும் என்றும் கூறினார். அதனால், முன்புபோல் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றுவது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு மக்களின் குரலாக இருப்பேன் என தெரிவித்த அவர், 50 ஆண்டுகால அரசியல் பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுள்ளதால் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.
















