உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் வரலாற்று சாதனை படைத்துள்ளார். கனடாவின் ஆன்டாரியோவில் நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில், எகிப்து வீராங்கனை ருகையா சலீமை எதிர்கொண்ட அனஹத் சிங், 11க்கு 3, 11க்கு 7, 11க்கு 9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், எகிப்து வீராங்கனைகளின் தொடர் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில், அனஹத் சிங்கின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, இது இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை ஊக்குவிக்கும் என கூறியுள்ளார்.
















