கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தரிசனம் மேற்கொண்டார்.
3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார்.
அப்போது, பாரம்பரிய முறைப்படி மேல் சட்டையின்றி, துண்டு போர்த்தியபடியே அவர் கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பக்தர்களின் தரிசனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்ததால், முதலமைச்சர் ஜோசப் விஜய் மட்டும் நேரடியாக மூகாம்பிகையின் சன்னதிக்கு சென்று வழிபட்டார். அவருக்காக சிறப்பு பூஜையும், ஆராதனையும் நடைபெற்றன.
அப்போது அம்மனின் பாதத்தில் வைத்து பூஜித்த சிறப்பு கயிறு ஒன்றை விஜய்யின் வலது கையில் கட்டிய அர்ச்சகர், கோயிலின் சிறப்பு குறித்தும் விளக்கினார். முன்னதாக, கோயிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள இரண்டரை அடி நீள வெள்ளி வாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் காணிக்கையாக அளித்தார்.
















