திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் 2 கோடி ரூபாய்-க்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பழைய நில ஆவணங்கள், வருவாய்த்துறை பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜரானார்.
















