சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

- இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் அரசுப் பள்ளியில், ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘சிறகை விரி, சிகரம் தொடு’ என்ற தலைப்பில், பள்ளி ஆண்டு மலரை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.

இதை அடுத்து அவர் கூறியதாவது, மாணவர்களுக்கு நாம் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

சந்திரயான்-2, 3-ன் பணிகள் சிறப்பாக உள்ளன. ‘பிரக்யான் ரோவரை உயிர்பித்தாலும், விக்ரம் லேண்டர் வழியாகத் தான் செய்தி பரிமாற்றத்தைக் கொடுக்க முடியும். இதனால், பூமிக்கு இனி புதிதாகச் செய்திகள் வரும் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பில்லை.

நிலவு ஒரே வட்டப்பாதையில் வராமல் மெதுவாக விலகிச் செல்கிறது. இதை, இப்போது நாம் வைத்துள்ள விக்ரம் லேண்டர் மூலமாக இன்னும், 70 ஆண்டுகளுக்கு அறிய முடியும். அதன் மூலம் வருங்காலத்தில், நிலவிற்கு மனிதனை அனுப்புவது மற்றும் பிற காரியங்களுக்கு உதவ முடியும்.

சந்திரயான்-3ல் அனுப்பிய விண்கலன், 3.50 இலட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பூமியைப் பார்க்கிறது. அதிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளை வைத்து பார்த்தால், பூமியை ஒத்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பார்க்க முடியும்.

நிலவின் தென்துருவம் மிகவும் கடினமான பகுதி. பல நாடுகள் முயன்றும் கூட செல்ல முடியவில்லை. அதில் நாம் இறங்கினோம் என்பது, தொழில்நுட்ப ரீதியாக, இனி நாம் அங்குச் சென்று இறங்கவும், அங்கிருந்து கனிமங்கள் மற்றும் ஆளில்லா விண்கலங்களை எடுத்து வரவும் முடியும்.

பூமியைச் சுற்றி, 400 கிலோமீட்டரில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது. எனவே, புதிய விண்வெளி மையத்தை அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் நிரந்தரமாக உருவாக்க வேண்டும். இதனால், சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

பூமியின் சுற்றுப்புற சூழ்நிலையைத் துல்லியமாக அறிய, இந்தியா, அமெரிக்கா இணைந்து செய்யும், நிசார் விண்கலம் இறுதிக் கட்ட பணிகள் நடக்கிறது என்று கூறினார்.

Tags: ISROMylswamy Annadurai Indian scientist
ShareTweetSendShare
Previous Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies