சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!
Jun 17, 2025, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

- இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் அரசுப் பள்ளியில், ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘சிறகை விரி, சிகரம் தொடு’ என்ற தலைப்பில், பள்ளி ஆண்டு மலரை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.

இதை அடுத்து அவர் கூறியதாவது, மாணவர்களுக்கு நாம் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

சந்திரயான்-2, 3-ன் பணிகள் சிறப்பாக உள்ளன. ‘பிரக்யான் ரோவரை உயிர்பித்தாலும், விக்ரம் லேண்டர் வழியாகத் தான் செய்தி பரிமாற்றத்தைக் கொடுக்க முடியும். இதனால், பூமிக்கு இனி புதிதாகச் செய்திகள் வரும் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பில்லை.

நிலவு ஒரே வட்டப்பாதையில் வராமல் மெதுவாக விலகிச் செல்கிறது. இதை, இப்போது நாம் வைத்துள்ள விக்ரம் லேண்டர் மூலமாக இன்னும், 70 ஆண்டுகளுக்கு அறிய முடியும். அதன் மூலம் வருங்காலத்தில், நிலவிற்கு மனிதனை அனுப்புவது மற்றும் பிற காரியங்களுக்கு உதவ முடியும்.

சந்திரயான்-3ல் அனுப்பிய விண்கலன், 3.50 இலட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பூமியைப் பார்க்கிறது. அதிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளை வைத்து பார்த்தால், பூமியை ஒத்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பார்க்க முடியும்.

நிலவின் தென்துருவம் மிகவும் கடினமான பகுதி. பல நாடுகள் முயன்றும் கூட செல்ல முடியவில்லை. அதில் நாம் இறங்கினோம் என்பது, தொழில்நுட்ப ரீதியாக, இனி நாம் அங்குச் சென்று இறங்கவும், அங்கிருந்து கனிமங்கள் மற்றும் ஆளில்லா விண்கலங்களை எடுத்து வரவும் முடியும்.

பூமியைச் சுற்றி, 400 கிலோமீட்டரில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது. எனவே, புதிய விண்வெளி மையத்தை அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் நிரந்தரமாக உருவாக்க வேண்டும். இதனால், சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

பூமியின் சுற்றுப்புற சூழ்நிலையைத் துல்லியமாக அறிய, இந்தியா, அமெரிக்கா இணைந்து செய்யும், நிசார் விண்கலம் இறுதிக் கட்ட பணிகள் நடக்கிறது என்று கூறினார்.

Tags: ISROMylswamy Annadurai Indian scientist
ShareTweetSendShare
Previous Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies