சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!
Oct 25, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

- இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் அரசுப் பள்ளியில், ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘சிறகை விரி, சிகரம் தொடு’ என்ற தலைப்பில், பள்ளி ஆண்டு மலரை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.

இதை அடுத்து அவர் கூறியதாவது, மாணவர்களுக்கு நாம் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

சந்திரயான்-2, 3-ன் பணிகள் சிறப்பாக உள்ளன. ‘பிரக்யான் ரோவரை உயிர்பித்தாலும், விக்ரம் லேண்டர் வழியாகத் தான் செய்தி பரிமாற்றத்தைக் கொடுக்க முடியும். இதனால், பூமிக்கு இனி புதிதாகச் செய்திகள் வரும் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பில்லை.

நிலவு ஒரே வட்டப்பாதையில் வராமல் மெதுவாக விலகிச் செல்கிறது. இதை, இப்போது நாம் வைத்துள்ள விக்ரம் லேண்டர் மூலமாக இன்னும், 70 ஆண்டுகளுக்கு அறிய முடியும். அதன் மூலம் வருங்காலத்தில், நிலவிற்கு மனிதனை அனுப்புவது மற்றும் பிற காரியங்களுக்கு உதவ முடியும்.

சந்திரயான்-3ல் அனுப்பிய விண்கலன், 3.50 இலட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பூமியைப் பார்க்கிறது. அதிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளை வைத்து பார்த்தால், பூமியை ஒத்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பார்க்க முடியும்.

நிலவின் தென்துருவம் மிகவும் கடினமான பகுதி. பல நாடுகள் முயன்றும் கூட செல்ல முடியவில்லை. அதில் நாம் இறங்கினோம் என்பது, தொழில்நுட்ப ரீதியாக, இனி நாம் அங்குச் சென்று இறங்கவும், அங்கிருந்து கனிமங்கள் மற்றும் ஆளில்லா விண்கலங்களை எடுத்து வரவும் முடியும்.

பூமியைச் சுற்றி, 400 கிலோமீட்டரில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது. எனவே, புதிய விண்வெளி மையத்தை அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் நிரந்தரமாக உருவாக்க வேண்டும். இதனால், சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

பூமியின் சுற்றுப்புற சூழ்நிலையைத் துல்லியமாக அறிய, இந்தியா, அமெரிக்கா இணைந்து செய்யும், நிசார் விண்கலம் இறுதிக் கட்ட பணிகள் நடக்கிறது என்று கூறினார்.

Tags: ISROMylswamy Annadurai Indian scientist
ShareTweetSendShare
Previous Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies