சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!
Aug 6, 2026, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

- இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் அரசுப் பள்ளியில், ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘சிறகை விரி, சிகரம் தொடு’ என்ற தலைப்பில், பள்ளி ஆண்டு மலரை, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.

இதை அடுத்து அவர் கூறியதாவது, மாணவர்களுக்கு நாம் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.

சந்திரயான்-2, 3-ன் பணிகள் சிறப்பாக உள்ளன. ‘பிரக்யான் ரோவரை உயிர்பித்தாலும், விக்ரம் லேண்டர் வழியாகத் தான் செய்தி பரிமாற்றத்தைக் கொடுக்க முடியும். இதனால், பூமிக்கு இனி புதிதாகச் செய்திகள் வரும் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பில்லை.

நிலவு ஒரே வட்டப்பாதையில் வராமல் மெதுவாக விலகிச் செல்கிறது. இதை, இப்போது நாம் வைத்துள்ள விக்ரம் லேண்டர் மூலமாக இன்னும், 70 ஆண்டுகளுக்கு அறிய முடியும். அதன் மூலம் வருங்காலத்தில், நிலவிற்கு மனிதனை அனுப்புவது மற்றும் பிற காரியங்களுக்கு உதவ முடியும்.

சந்திரயான்-3ல் அனுப்பிய விண்கலன், 3.50 இலட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பூமியைப் பார்க்கிறது. அதிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளை வைத்து பார்த்தால், பூமியை ஒத்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பார்க்க முடியும்.

நிலவின் தென்துருவம் மிகவும் கடினமான பகுதி. பல நாடுகள் முயன்றும் கூட செல்ல முடியவில்லை. அதில் நாம் இறங்கினோம் என்பது, தொழில்நுட்ப ரீதியாக, இனி நாம் அங்குச் சென்று இறங்கவும், அங்கிருந்து கனிமங்கள் மற்றும் ஆளில்லா விண்கலங்களை எடுத்து வரவும் முடியும்.

பூமியைச் சுற்றி, 400 கிலோமீட்டரில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது. எனவே, புதிய விண்வெளி மையத்தை அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் நிரந்தரமாக உருவாக்க வேண்டும். இதனால், சண்டை இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

பூமியின் சுற்றுப்புற சூழ்நிலையைத் துல்லியமாக அறிய, இந்தியா, அமெரிக்கா இணைந்து செய்யும், நிசார் விண்கலம் இறுதிக் கட்ட பணிகள் நடக்கிறது என்று கூறினார்.

Tags: ISROMylswamy Annadurai Indian scientist
Share
Tweet
SendShare
Previous Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies