ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கும் விவகாரம் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி காஜல். மாற்றுத்திறனாளி மாணவியான இவர், ஃபங்யால் பஞ்சாயத்து நிர்வாக எல்லைக்குட்பட்ட மெல்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்தான் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.

இப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட மொத்தம் 101 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் ஒரே அணுகு சாலை தற்போது வாகனம் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை. அப்போது, விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நிலவுகிறது.

எனவே, பிரதமர் மோடிக்கு காஜல் எழுதி இருக்கும் கடிதத்தில், “நான் உதம்பூர் மாவட்டத்தின் ஃபங்யால் பஞ்சாயத்து நிர்வாக எல்லைக்குள் வரும் மெல்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறேன். எங்களது பள்ளிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது.

இதனால் நான் பலமுறை கீழே விழுந்திருக்கிறேன். எனவே, நானும், எனது நண்பர்களும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில், பள்ளிக்குச் செல்ல நல்ல சாலையை ஏற்படுத்தித் தருமாறு உங்களை (பிரதமர் மோடி) கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரைலான நிலையில், உதம்பூர் மாவட்ட உதவி வளர்ச்சி ஆணையர் ரஞ்ஜித் சிங் கோட்வாலின் கவனத்திற்குச் சென்றது.

இதையடுத்து, ரஞ்ஜித் சிங் கோட்வால் கூறுகையில், “பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலம் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பாக, நான் துணை ஆணையருடன் உடனடியாக விவாதித்து, எனது துறை மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது துறை மூலமாகவோ பள்ளிக்குச் செல்லும் சாலை உட்பட பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்வேன். சிறுமியின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்” என்றார்.

Tags: PM Modijammu kashmirletterSchool Girl
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன் டிராபியை நடத்த நாங்கள் தயார் – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!

Next Post

தேசிய ஹாக்கி : தமிழகம் மூன்றாவது இடம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies