புழல் ஏரி நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது
பூண்டி, புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், 3 ஆயிரத்து 300 மி.கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 20.86 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 570 கன அடியாக உள்ளது.
புழல் ஏரி நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், இன்று மாலை 4 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் 22.35 அடியை நெருங்கியுள்ளது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.