மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் மீட்கப்பட்ட அந்த நிமிடத்தில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகாசி சுரங்க இடிபாடுகளை சீர் செய்து உள்ளே சென்று தொழிலாளர்களை சந்தித்த போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் தங்களை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த   12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்பதற்காக ஆகர் இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.

இறுதிக்கட்டத்தில் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற 12 பேர் கொண்ட குழுவினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சுரங்கத்தினுள் சென்று இடிபாடுகளை அகற்றி உள்ளே சென்று தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை அடைந்தனர். அப்போது அவர்களை கட்டிப்பிடித்து கொண்டாடிய தொழிலாளர்கள் தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்.

இதுதொடர்பாக அக்குழுவின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாங்கள் நவம்பர் 27 ஆம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கி நவம்பர் 28 மாலை 6 மணிக்கு பணியை முடித்தோம். 24 முதல் 36 மணி நேரத்தில் பணிகளை முடிக்க முடியும் என கூறியிருந்தோம். அதன்படி பணியை முடித்தோம். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக கட்டணம் எதுவும் வாங்கவில்லை.

இடிபாடுகளை அகற்றி கடைசிப் பகுதியை அடைந்தபோது தொழிலாளர்கள் பேசுவதை கேட்க முடிந்ததாகவும், உடனே எஞ்சிய இடிபாடுகளை அகற்றிவிட்டு மறுபக்கம் இறங்கியதாகவும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த குரேஷி என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள் நன்றி தெரிவித்ததுடன், கட்டிப்பிடித்து தோளில் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: rescue 40 workers trapped in the tunnel
Share
Tweet
SendShare
Previous Post

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

Next Post

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies