மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!
Jul 3, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் மீட்கப்பட்ட அந்த நிமிடத்தில் நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Nov 29, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசி சுரங்க இடிபாடுகளை சீர் செய்து உள்ளே சென்று தொழிலாளர்களை சந்தித்த போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் தங்களை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த   12-ம் தேதி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்பதற்காக ஆகர் இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. ஆனால் திடீரென ஆகர் இயந்திரம் பழுதானதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகர் இயந்திரத்தின் சேதம் அடைந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது.

இறுதிக்கட்டத்தில் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற 12 பேர் கொண்ட குழுவினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் சுரங்கத்தினுள் சென்று இடிபாடுகளை அகற்றி உள்ளே சென்று தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை அடைந்தனர். அப்போது அவர்களை கட்டிப்பிடித்து கொண்டாடிய தொழிலாளர்கள் தோளில் தூக்கிவைத்து கொண்டாடினர்.

இதுதொடர்பாக அக்குழுவின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாங்கள் நவம்பர் 27 ஆம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கி நவம்பர் 28 மாலை 6 மணிக்கு பணியை முடித்தோம். 24 முதல் 36 மணி நேரத்தில் பணிகளை முடிக்க முடியும் என கூறியிருந்தோம். அதன்படி பணியை முடித்தோம். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக கட்டணம் எதுவும் வாங்கவில்லை.

இடிபாடுகளை அகற்றி கடைசிப் பகுதியை அடைந்தபோது தொழிலாளர்கள் பேசுவதை கேட்க முடிந்ததாகவும், உடனே எஞ்சிய இடிபாடுகளை அகற்றிவிட்டு மறுபக்கம் இறங்கியதாகவும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த டெல்லியைச் சேர்ந்த குரேஷி என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள் நன்றி தெரிவித்ததுடன், கட்டிப்பிடித்து தோளில் தூக்கிக் கொண்டாடினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

Next Post

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies