அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! - சென்னை உயர் நீதிமன்றம்
Mar 15, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க  இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ‘யூ டியூப்’ சானல் ஒன்றுக்கு, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தது பற்றி, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ‘சுப்ரீம் கோர்ட்டுல ஒரு என்.ஜி.ஓ. போய் இந்தப் பிரச்னையை ஆரம்பிக்குது. இந்திய கலாசாரத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம் தான் அது’ என்று, பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து, சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் என்பவர். அண்ணாமலைக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தப் புகாரை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு கோரியும், உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில், ‘என் பேட்டி தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி என்.ஜி.ஓ. வழக்கு தொடர்ந்திருப்பதாக, நான் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார், அவ்வாறு நான் கூறவில்லை. எனக்கு எதிராக, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த யாரும். எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை சார்பில், வழக்கறிஞர்கள் சி.வி.ஷியாம் சுந்தர், வி.வணங்காமுடி, ஆர்.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர்.

சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி பியூஸ் மனுஷ்க்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 4க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags: chennai high courtbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! -இந்திய வானிலை ஆய்வு மையம்

Next Post

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies