அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! - சென்னை உயர் நீதிமன்றம்
Jul 29, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க  இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ‘யூ டியூப்’ சானல் ஒன்றுக்கு, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தது பற்றி, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ‘சுப்ரீம் கோர்ட்டுல ஒரு என்.ஜி.ஓ. போய் இந்தப் பிரச்னையை ஆரம்பிக்குது. இந்திய கலாசாரத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம் தான் அது’ என்று, பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து, சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் என்பவர். அண்ணாமலைக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தப் புகாரை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு கோரியும், உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில், ‘என் பேட்டி தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி என்.ஜி.ஓ. வழக்கு தொடர்ந்திருப்பதாக, நான் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார், அவ்வாறு நான் கூறவில்லை. எனக்கு எதிராக, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த யாரும். எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை சார்பில், வழக்கறிஞர்கள் சி.வி.ஷியாம் சுந்தர், வி.வணங்காமுடி, ஆர்.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர்.

சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி பியூஸ் மனுஷ்க்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 4க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags: chennai high courtbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! -இந்திய வானிலை ஆய்வு மையம்

Next Post

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies